ஓடைக்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்த கார்...  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு...

உடுமலை அருகே ஓடைக்குள் பாய்ந்து தலைகுப்புற கார் கவிழ்ந்த விபத்தில், பெண் மருத்துவர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஓடைக்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்த கார்...  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு...

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள உறவினர் இல்ல திருமண விழா  கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று விருந்தை  முடித்துக்கொண்டு சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிக்கு சென்ற  அரசு மருத்துவர் காவியா உப்பட 4 பேர்  காரில் சென்று கொண்டு இருந்த போது திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஏரிப்பாளையம் சேரன் நகர் சாலையோர பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கார் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரை ஓட்டிச்சென்ற காவியா(25) மற்றும் காவியாவின் தாத்தா பொன்வேல் (80) சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த நிலையில் காரில் பயணம் செய்த ஓய்வு பெற்ற வட்டாச்சியர்  சக்திவேல், விஜயதாரணி மற்றும் பாப்பு  என்கிற மூதாட்டி படுகாயமடைந்து உடுமலை அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கபட்டு கோவை தனியார் மருத்துவ மணையில் சிசிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சக்திவேல், பாப்பு என்கிற மூதாட்டி சிசிச்சை பலனின்றி உயர் இழந்தனர்.

இதற்கிடையில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாதினால் மேலும் இருவர் உயிர் இழந்ததால் பலி எண்ணிக்கை  4 ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் காரில் பயணம் செய்த விஜயதாரணிக்கு கோவை தனியார் மருந்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.