ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள்...நீரில் மூழ்கி 4 பேர் மாயம்!

ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள்...நீரில் மூழ்கி 4 பேர் மாயம்!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஆற்றில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த நிகழ்வு அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் சங்ககிரி அடுத்துள்ள எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 10 பேர், காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க : தூத்துக்குடியில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்...திரளானோர் பங்கேற்பு!

அப்போது மணிகண்டன், பாண்டியராஜன், முத்துசாமி உள்ளிட்ட 4 மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமானதாக கூறப்படுகிறது. தகவலின் அடிப்படையில் அங்கு வந்த எடப்பாடி தீயணைப்புத் துறையினர், காவல்துறை உதவியுடன் மாயமான மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்டநேர  தேடுதல் பணிக்கு பிறகு மணிகண்டன் உள்ளிட்ட 2 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில், மாயமான மற்ற 2 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, காவிரி ஆற்றில் குளிக்க சென்றபோது, அரசு கல்லூரி மாணவர்கள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.