தமிழகத்தில்  44 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

தமிழகத்தில்  44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அமல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில்  44 ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம்!!

இது தொடர்பாக உள்துறை செயலரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போலீஸ் அகாடமி இயக்குநராக இருந்த கூடுதல் டிஜிபி அமல்ராஜ் தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்டாயக் காத்திருப்பில் இருந்த ஐ.ஜி.கண்ணன், சென்னை ஆயுதப்படை ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த தேன்மொழி, வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில்நுட்ப பிரிவு ஐஜியாக இருந்த மகேஷ்வரி, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராகவும் மத்திய மண்டல ஐஜியாக இருந்த பாலகிருஷ்ணன் கோவை மாநகர காவல் ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மத்திய அரசுப் பணியில் இருந்து வந்து காத்திருப்பில் இருந்த அவினாஷ் குமார், நெல்லை மாநகர காவல் ஆணையராகவும் சிபிசிஐடிடி ஐஜியாக இருந்த ஜெயகவுரி, போலீஸ் அகாடமி துணை இயக்குநராகவும் நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார் மத்திய மண்டல ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த விஜயகுமார்,சென்னை அண்ணா நகர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த சிவ பிரசாத், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பாஸ்கரன், திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளராகவும் திண்டுக்கல்லில் இருந்த ஸ்ரீநிவாசன் நெல்லை கிழக்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்ல எஸ்.பி சுரேஷ்குமார் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் கரூர் திருவண்ணாமலை  ராமநாதபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.