3, 650 கிலோ கஞ்சா கடத்தல்...5 பேர் கைது.!

மதுரை வாடிப்பட்டி அருகே  3 ஆயிரத்து 650 கிலோ கஞ்சாவை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

3, 650 கிலோ கஞ்சா கடத்தல்...5 பேர் கைது.!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களா பகுதி நான்கு வழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர்கள் மூன்று பேர் போலீசாரை கண்டதும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

அவர்களை விரட்டி பிடித்த போலீசார், அவர்களிடம் சோதனை மேற்க்கொண்டனர். அதில் மூவரும் 1,750 கிலோ கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது. அதனைதொடர்ந்து பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் இவர்களின் கூட்டாளியான ஜோசப் மணிராஜ், முத்துராஜ் ஆகியோரும் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. பிடிபட்டவர்கள் சொன்ன தகவலின்பேரில் கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து  1,900 கிலோ கஞ்சாவையும், ரூ.21,170 ரொக்கப்பணத்தையும் ,கஞ்சா கடத்துவதற்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.