தமிழ்நாட்டுக்கு வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்..

தமிழ்நாட்டுக்கு வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி  உள்ளார்.

தமிழ்நாட்டுக்கு வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும்..

தமிழ்நாட்டுக்கு வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி  உள்ளார்.

இது தொடர்பா பிரதமர் மோடிக்கு  கடிதம் எழுதியிருக்கும் மு.க.ஸ்டாலின்,தமிழகத்தில் தடுப்பூசி முகாம் மூலம் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசிகள் அதிக அளவில் போடப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 31ம் தேதிக்கு முன்பாக தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும்  வாரத்திற்கு ஆறு நாட்களுக்கு தினமும் 5 லட்சமும், ஏழாவது நாளில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக மோடிக்கு எழுதிய கடிதத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.