இன்று தமிழகத்திற்கு 5,00,000 கோவிஷூல்டு தடுப்பூசி வருகை!

இன்று தமிழகத்திற்கு மேலும் 5,00,000 கோவிஷூல்டு தடுப்பூசி பிற்பகல் 12 மணிக்கு சென்னை வர உள்ளது.  

இன்று தமிழகத்திற்கு 5,00,000 கோவிஷூல்டு தடுப்பூசி வருகை!

இன்று தமிழகத்திற்கு மேலும் 5,00,000 கோவிஷூல்டு தடுப்பூசி பிற்பகல் 12 மணிக்கு சென்னை வர உள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை  மொத்தமாக தடுப்பூசிகள் 2,74,07,600 வந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் வரை  2,68,30,662 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் இரண்டில் இருந்து மொத்தமாக தமிழகத்திற்கு வந்த தடுப்பூசிகள் கோவாக்சின் - 41,01,580, கோவிஷூல்டு - 2,33,05,250-மொத்தம் வருகை - 2,74,07,600, மொத்தம் தடுப்பூசி செலுத்தப்பட்டது - 2,68,30,662 ஆகும்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரக்கூடிய சூழலில் ஆகஸ்ட்  மாதத்திற்கு 79 லட்சம் தடுப்பூசி வழங்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில் இன்று தமிழகத்திற்கு மேலும் 5,00,000 கோவிஷூல்டு தடுப்பூசி வந்துள்ளது.

மேலும், இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் அதனை தேவைக்கு ஏற்றவாறு பிரித்து அனுப்பப்பட உள்ளனர். தமிழக அரசின் கையிருப்பில் 10,16,819 தடுப்பூசிகள் உள்ளது இந்த நிலையில் இன்று மேலும், இன்று கூடுதலாக 5,00,000 தடுப்பூசிகள் வர உள்ளது.