தமிழ்நாட்டில் 5,893 பேர் டெங்குவால் பாதிப்பு...!

நடப்பாண்டில் தற்போது வரை ஐந்தாயிரத்து 893 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்   மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் மழைக் கால சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து வட்டார மருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

இதையும் படிக்க : முத்துராமலிங்க தேவர் ஆலய தேர் பவனி...!

நேற்று ஒரே நாளில் 67 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 607 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அதன்படி, நடப்பாண்டில் தற்போது வரை ஐந்தாயிரத்து 893 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.