தமிழக அரசு தரப்பில் ஆஜராக மேலும் 6 வழக்கறிஞர்கள் நியமனம்...

தமிழக அரசு தரப்பில் ஆஜராக மேலும் 6 வழக்கறிஞர்கள் நியமனம்...

தமிழக அரசு தரப்பில் ஆஜராக மேலும் 6 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

 தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். தமிழக அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்களை தேர்வு செய்யும் நடைமுறை முடியும் வரை, அவர் அளித்த பரிந்துரையில் அடிப்படையில் 17 பேரை தமிழக அரசு மே 13ஆம் தேதி தற்காலிக அடிப்படையில் நியமித்தது.

இதனையடுத்து மேலும் 6 வழக்கறிஞர்களை தமிழக அரசு நேற்று  நியமித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி வெங்கடேஸ்வரன், கே.வி.சஞ்சீவ்குமார், எஸ்.சூர்யா, ரிச்சர்ட்சன் வில்சன், அமிர்தா பூங்கொடி தினகரன், அகிலா ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.