விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.40 லட்சம் மதிப்பிலான 700 மதுபாட்டில்கள் பறிமுதல்...

அரியலூர் அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.40 லட்சம் மதிப்பிலான 700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.40 லட்சம் மதிப்பிலான 700 மதுபாட்டில்கள் பறிமுதல்...

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டையில்  அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக  மாவட்ட எஸ்.பி க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், அப்பகுதியில் திடீர் சோதனை மேற்க்கொண்டனர்.

அப்போது ஸ்டீபன் என்பவரது வீட்டில்  700-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள்  விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து விற்பனையாளர்கள் ஆல்வின் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பணைக்காக வைத்திருந்த சுமார் 1.40 லட்சம் மதிப்பிலான 700 மது பாட்டில்களை பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் அவர்களிடமிருந்து ரூ.1500 ரொக்கம் பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய வீட்டு உரிமையாளர் ஸ்ரீபன் என்பவரை தேடி வருகின்றனர்.