இடத்தகராறு: சும்மா சுத்தி சுத்தி 8 பேரை வாளால் வெட்டிய இளைஞர்!

தஞ்சை அருகே இளைஞர் ஒருவர் வாளால் பயங்கரமாக வெட்டியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

இடத்தகராறு:  சும்மா சுத்தி சுத்தி 8 பேரை வாளால் வெட்டிய இளைஞர்!

தஞ்சை அருகே இளைஞர் ஒருவர் வாளால் பயங்கரமாக வெட்டியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார்கோட்டை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கோவில் உள்ளது. இந்த இடம் தனக்கு சொந்தமானது என கூறிய ஒரு குடும்பத்தினருக்கும் ஊர் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது  வாக்கு வாதம் முற்றிய நிலையில் வாலிபர் ஒருவர் வாள் ஒன்றை எடுத்துவந்து கண்மூடித்தனமாக சரமாரியாக வெட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தடுக்க மற்றவர்களும் கட்டைகளை எடுத்து அடித்தனர். இதில் இரு தரப்பை சேர்ந்த எட்டு பேர் படுகாயமடைந்து தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்தது வந்த போலீசார் வாளால் சரமாரியாக வெட்டிய சின்னராஜ் உள்ளிட்ட சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்