சென்னை உயர்நீதிமன்றத்தின் 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு!!

சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 9 கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்க உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 9 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு!!

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், எஸ்.சதிக்குமார், கே. முரளிசங்கர், ஆர். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை  நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று 9 கூடுதல் நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இதனையடுத்து 9 பேரும் இன்று முறைப்படி பதவியேற்க உள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நூலக கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலைமை  நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி  பதவி ஏற்பு உறுதி மொழி செய்து வைக்க உள்ளார்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சுந்தர் மோகன் மற்றும் கே. குமரேஷ் ஆகியோர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.