32 இடங்களில் 96 புதிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்...இயக்கத்தை துவக்கி வைத்தார் சங்கர் ஜிவால்!

32 இடங்களில் 96 புதிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்...இயக்கத்தை துவக்கி வைத்தார் சங்கர் ஜிவால்!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களின் இயக்கத்தை சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். 

சென்னை பெருநகரை குற்றங்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்காகவும், நகரை பாதுகாப்பாக வைப்பதற்காகவும் நகரில் பல இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இதையும் படிக்க : 6-வது முறையாக கர்நாடகா செல்லும் பிரதமர் மோடி...ரூ.16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் திறப்பு!

அந்த வகையில், திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் நுங்கம்பாக்கம் காவல் சரகத்திற்குட்பட்ட 32 இடங்களில்  96 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன. 

இந்நிலையில், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல் ஆணையர் சங்கர் ஜிவால் புதிய கண்காணிப்புக் கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்து அதன் செயல்பாட்டைப் பார்வையிட்டார்.