வீச்சருவாளுடன் குறிப்பிட்ட சாதியினரை இழிவாக பேசும் 12 வயது சிறுவன்.! வீடியோ வெளியாகி அதிர்ச்சி.! 

வீச்சருவாளுடன் குறிப்பிட்ட சாதியினரை இழிவாக பேசும் 12 வயது சிறுவன்.! வீடியோ வெளியாகி அதிர்ச்சி.! 

ஓட்டப்பிடாரம் அருகே 12 வயது சிறுவன், வீச்சருவாளுடன் வீர வசனம் பேசி, ஒரு குறிப்பிட்ட சாதியினரை இழிவாக பேசி மிரட்டும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுவன், தமது கையில் அரிவாளை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட சாதியினரை அவதூறாக பேசி வீடியோ எடுத்துள்ளான். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், குறிப்பிட்ட சாதியினர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிறுவனின் மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பக்கத்து ஊரை சேர்ந்த வேறு சாதி இளைஞர்கள் சிறுவனின் கூட்டாளியை தாக்கியதால், அந்த இளைஞர்களுக்கு மிரட்டல் விடுப்பதற்காக இந்த சிறுவன் தவறாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இதுபோன்ற தவறுகள் உங்கள் பிள்ளைகளால் இனி நடக்கக் கூடாது என்றும், அவர்களை கண்காணித்து வளர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சிறுவன் பயன்படுத்திய 2 செல்போன்கள் அரிவாள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார், பெற்றோருடன் சேர்ந்து சிறுவன் மன்னிப்பு கேட்கும் வீடியோவை பதிவு செய்தனர்.