32 வயதுடைய நபர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை...! போலீசார் தீவிர விசாரணை...!
உளுந்தூர்பேட்டை அருகே, இரயில் முன் பாய்ந்து 32 வயதுடைய நபர் தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விருத்தாசலம் இரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை சம்பவம் :
இன்று காலை மதுரையில் இருந்து விழுப்புரம் சென்ற பேசஞ்சர் இரயில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கம் என்ற இடத்தை அடையும் போது கிராம செல்லும் சாலையில் இரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது ஒருவர் இருச்சக்கர வாகனத்தில் வேகமாக வந்து மூடப்பட்டு இருந்த கேட்டின் அருகே, வாகனத்தை நிறுத்திவிட்டு வேகமாக வந்த ரயிலின் முன் பாய்ந்து, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை :
விருத்தாசலம் இரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி, இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர் யார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற கோணத்தில் விசாரணைநடத்தினர். அதில், அவர் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட கணேஷ் நகர் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர்(32) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 வயதில் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.