வண்டலூர் மேம்பாலத்தின் மீது ஏறும்போது திடீரென கவிழ்ந்த கார்...! கிரேன் மூலம் அகற்றம்..!

சென்னை அருகே வண்டலூர் மேம்பாலத்தின் மீது சென்ற கார் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் படுகாயம்...!

வண்டலூர் மேம்பாலத்தின் மீது ஏறும்போது திடீரென கவிழ்ந்த கார்...! கிரேன் மூலம் அகற்றம்..!

சென்னை மாடம்பாக்கம் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றி செல்ல கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த கார், பெருங்களத்தூரிலிருந்து வண்டலூர் மேம்பாலத்தின் மீது ஏறும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து கார் இடது பக்கமாக உள்ள தடுப்பு சுவர் மீது மோதி மேம்பாலத்தில் மீது கவிழ்ந்தது.


இதில் கார் ஓட்டுநர் படுகாயம் அடைந்து அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் . போக்குவரத்து காவல்துறையினர் கிரேன் மூலம் மேம்பாலத்தின் மீது கவிழ்ந்த காரை அப்புறப்படுத்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணையில், வண்டலூர் மேம்பாலத்தின் மீது ஏறும்போது திடீரென லாரி அருகில் வந்தது தான் இந்த விபத்துக்கான காரணம் என  தெரியவந்துள்ளது.