கை அகற்றப்பட்ட குழந்தை திடீரென உயிரிழப்பு...! தவறான சிகிச்சை தான் காரணமா?

கை அகற்றப்பட்ட குழந்தை திடீரென உயிரிழப்பு...! தவறான சிகிச்சை தான் காரணமா?

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழுந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தங்களது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதியினர் குற்றம் சாட்டியிருந்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டை அடுத்து விசாரணை குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : விழாவில் ஜெயலலிதா பெயரை சொன்ன தமிழ் ஆசிரியர்...தகாத வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி...கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!

இதையடுத்து, அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தையின் உடல் நிலை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ஒன்றரை வயது குழந்தை  உயிரிழந்தது.

பெற்றோர்களின் குற்றச்சாட்டு எதிரொலியாக, அரசு சார்பில் விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அண்மையில் அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.