சுட்டெரிக்கும் வெயிலை தணித்த சூரைக்காற்று மழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

சுட்டெரிக்கும் வெயிலை தணித்த சூரைக்காற்று மழை...மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை நகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென சூரைக்காற்றுடன் மழை பெய்தது.  அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, வடபழனி, கோடம்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரம் மழை கொட்டியது.

இதையும் படிக்க : அமித் ஷாவின் குற்றச்சாட்டு...பதிலடி கொடுத்த கட்சித் தலைவர்கள்!

இதே போல் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், புழல், மாதவரம், கொளத்தூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதையடுத்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரி பகுதிகளில் கடந்த 15 நாட்களாக கடுமையாக வெப்ப காற்று வீசியதின் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் திடீரென பெய்த கனமழையால் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.