ஈபிஎஸ் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்...!

ஈபிஎஸ் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்...!

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புறநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க : சொத்துப்பட்டியலுக்கு யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்க வில்லை - அண்ணாமலை பேட்டி!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்றிய, நகர செயலாளர்கள் பங்கேற்றனர். அப்போது, அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கிய ஈபிஎஸ் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து அறிவுரைகள் வழங்கினார். 

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக கட்சி அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.