அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் தீ விபத்து...!

அதிமுக பிரமுகர் வீட்டில் திடீர் தீ விபத்து...!

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அதிமுக பிரமுகர் இல்லத்தின் மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அத்வைத ஆசிரமம் சாலையில் அதிமுக நிர்வாகி துரை புவனேஸ்வரன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வர்ணம் பூசம் பணி மேற்கொண்டுள்ளார். இதற்காக வீட்டிலிருந்த பழைய பொருட்கள் அனைத்தையும் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த தகரத்தினாலான குடோனில் போட்டுள்ளார். 

இந்த நிலையில் வீட்டு பணியாளர்கள் இன்றைய தினம் உபயோகமற்ற பழைய புத்தகங்களை வீட்டின் மாடியில் வைத்து எரியூட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தகர குடோனில் தீப்பொறி பட்டு எரிய தொடங்கியது.

இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவே தீயணைப்புத் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க    | நீட் தேர்வு காரணமாக தந்தை, மகன் உயிரிழப்புக்கு தமிழக ஆளுநரும், மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும்" - விசிக. எம்.பி ரவிக்குமார்.