தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து...!

போடியில் மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து...!

தேசிய நெடுஞ்சாலையில் ஜீப் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து...!

தேனி மாவட்டம் போடி புதூர் ரயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆன் குழந்தை உள்ளனர். இவர் தற்போது  போடி கீழத் தெருவில் வசித்து வருகிறார். இன்று தனது இருசக்கர வாகனத்தில் போடியில் இருந்து முந்தல் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதி அருகே கேரளாவில் இருந்து போடிக்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு வேகமாக ஜீப் வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இரு சக்கர வாகனத்தில் வந்த கணேசன் எதிர்பாராத விதமாக ஜீப்பின் பக்கவாட்டு கம்பியில் மோதியதால் சாலையில் தூக்கி வீசப்பட்டு இரத்த வெள்ளத்துடன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரங்கணி காவல்துறையினர் உடலை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய ஜீப் ஓட்டுனரான போடி, துரைராஜபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த செல்லதுரை (48) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.