ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டிய நாய்... காண்போரை வியக்க வைத்த காட்சி...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வீட்டில் வளரும் நாய், அதே வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டிய காட்சி காண்போரை நெகழ வைத்தது.

ஆட்டுக்குட்டிக்கு பாசத்துடன் பாலூட்டிய நாய்... காண்போரை வியக்க வைத்த காட்சி...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சந்தவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜி என்கின்ற விவசாயி தன்னுடைய வீட்டில் நாய் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடு ஈன்ற குட்டி தன்னுடைய தாயாரின் பால் சரிவர கிடைக்காததால் பசியால் தவிர்த்து வந்ததாக தெரிகிறது.

இதனால் அங்கேயே குட்டிகளை ஈன்று உள்ள நாய் நின்று கொண்டிருக்கும் போது, அடிக்கடி தாய்ப்பால் என்று தவிக்கும் ஆட்டுக்குட்டி அந்த நாயிடம் சென்று நாயின் பால் மடியில் அழகாக பாலை உறிஞ்சி குடித்து விட்டு அடிக்கடி வருகிறது. இந்த நாய் மற்றும் ஆட்டின் பாலூட்டும் தாய்  நாய் மற்றும் குட்டி ஆட்டின் பாச செயலை அப்பகுதியில் காண்போரை வியக்க வைக்கிறது.