13 ஆண்டுகளாக வளர்ந்து வந்த பொம்மி...கல்லறை கட்டிய தம்பதி!! ஏன் தெரியுமா?

பாசத்துடன் வளர்த்து வந்த நாய் உயிரிழந்ததால், அதனை அடக்கம் செய்து, கல்லறை கட்டியுள்ளனர் ஒரு தம்பதியினர்.  

13 ஆண்டுகளாக வளர்ந்து வந்த பொம்மி...கல்லறை கட்டிய தம்பதி!! ஏன் தெரியுமா?

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுமுகநயினார்-பாக்கியலட்சுமி தம்பதியினர். இவர்கள் பொம்மி என்ற நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளனர்.

13 ஆண்டுகளாக வளர்த்து வந்த நாய், திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இதனால் மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட ஆறுமுகநயினார் - பாக்கியலட்சுமி தம்பதியர், உயிரிழந்த நாயை தனது தோட்டத்தில் புதைத்து அடக்கம் செய்தனர்.

பின்னர் மனிதர்கள் உயிரிழந்தால் அவர்களின் நினைவாக கல்லறை கட்டுவது போல், நாயை அடக்கம் செய்த இடத்தில் அதன் நினைவாக கல்லறை ஒன்றை கட்டியுள்ளனர். மனிதர்களையே, இறந்தப்பின் மறந்து விடும் இந்த காலத்தில் பாசமாக வளர்த்த நாய்க்கு கல்லறைக் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.