கொடைக்கானல்: கனமழையால் சரிந்து விழுந்த மலைப்பாதை..!

கொடைக்கானல்: கனமழையால் சரிந்து விழுந்த மலைப்பாதை..!

கொடைக்கானலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மலைப்பாதை சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கொடைக்கானலில் மழை:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதைகள் மட்டுமின்றி நகர் பகுதிகளில் உள்ள சாலைகளிலும் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மலைப்பாதைகள் பாதிப்பு:

கனமழை காரணமாக மலைப்பாதைகள் பாதி அளவுக்கு மேல் சரிந்து விழுந்துள்ளது. இதனால், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்தல்:

மலைப்பாதைகள் சரிந்ததால் நாயுடுபுரம், ஆனந்தகிரி, அண்ணாநகர், செண்பகனூர், பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், சாலைகளை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள் மிகவும் பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.