ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு..முதலமைச்சர் ஸ்டாலின்

ஆன்லைன் சூதாட்டத்தை விரைவில் தடை செய்து,  நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு..முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள், கொலைகள், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம், சூதாட்டத்தினால் படித்தவர்களும், வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்து கொள்வதாக கூறினார். எனவே இதனை தடுக்கும் வகையில் சூதாட்டத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கோரினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், கடந்த ஆட்சிக் காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக இல்லை என  கூறி உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்ததாக குறிப்பிட்டார்.

இதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதாகவும், தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கூறினார்.