பெண்களுக்கான பாதுகாப்பான நகரம்: ஆய்வில் சென்னைக்கு கிடைத்திருக்கும் இடம் என்ன தெரியுமா..?

பெண்களுக்கான பாதுகாப்பான நகரம்: ஆய்வில் சென்னைக்கு கிடைத்திருக்கும் இடம் என்ன தெரியுமா..?

இந்தியாவிலுள்ள பாதுகாப்பான மெட்ரோ நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளதாக இணையதள ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Numbeo என்ற இணையதள நிறுவனம் BBC, Time The Week, The Telegraph, The Age, The Sydney Morning Herald, China Daily, The Washington Post, USA Today மற்றும் பல செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளின் அடிப்படையில் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிறுவனம், உலகின் முக்கிய நகரங்கள் பற்றி மேற்கொண்ட ஆய்வின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி பாதுகாப்பான மெட்ரோ நகரங்களின் பட்டியலில் சென்னை, இந்திய அளவில் முதலிடத்தையும்,  உலகளவில் 127-வது இடத்தையும் பெற்றுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பான சூழ்நிலை தொடர்பாகவும், இதர காரணங்களின் அடிப்படையிலும் இந்த  ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதர மெட்ரோ நகரங்களான மும்பை (161), கொல்கத்தா (174) மற்றும் புது டில்லி (263) ஆகியவை சென்னைக்கு அடுத்து இடம்பெற்றுள்ளன.

மேலும், இவ்வாண்டின் தொடக்கத்தில் “அவ்தார்” என்ற நிறுவனம் வாழ்வியல் சூழ்நிலை, பாதுகாப்பு, பெண்களின் பங்கேற்பு, பெண்களுக்கான முக்கியத்துவ முன்னெடுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், பத்துலட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் 78. 4 புள்ளிகளுடன் சென்னை மாநகரம் பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான நகரம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெருநகர காவல், சென்னை மாநகர மக்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த தன்னை அர்ப்பணித்து வருகிறது.

செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்  NUMBEO என்ற தனியார் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர்/ஆசிரியரான திரு. லேடன் அடமோவிக் என்பவர் கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளராகவும் போஸ்னியா & ஹெர்சகோவினா, பஞ்ஜா லுகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பயிற்றுநராகவும் பணிபுரிந்தவர் ஆவார்.

இதையும் படிக்க   | “பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்” - அமைச்சர் மனோ தங்கராஜ்