மதுரை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை..! பேராசிரியர் கைது,..!

மதுரை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை..!  பேராசிரியர் கைது,..!


உசிலம்பட்டி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாக  கல்லூரி பேராசிரியரை கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூரில் செயல்பட்டு வரும் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் ஊரக வளர்ச்சித்துறையின் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஜெகன் கருப்பையா. கடந்த 8 ஆண்டுகளாக இந்த கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் இவர், அவரது பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு பயலும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாக சம்மந்தப்பட்ட மாணவி மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், டிஐஜி பொன்னி உத்தரவின் பேரில் இன்று பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை செக்காணூரணி போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 இதையும் படிக்க;... பேரவையில் பாமக கவன ஈர்ப்பு தீர்மானம்..! பதிலளித்து பேசிய முதலமைச்சர்...!

தொடர்ந்து கல்லூரியில் வேறு எந்த மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்துள்ளாரா, இவருக்கு பேராசிரியர் மற்றும் மாணவர்கள் யாரும் உடந்தையாக இருந்துள்ளனரா என்ற கோணத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ,

மேலும் இந்த புகார் தொடர்பாக தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் டிஐஜி பொன்னி நேரில் வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், கல்லூரி மாணவிக்கு 18 வயது நிரம்பாத சூழலில் பாலியல் தொல்லை அளித்தது மற்றும் போக்சோ வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க;... முதலமைச்சர் தனிப்பிரிவை அழைத்த மாணவி...கல்லூரி பேராசிரியர் மீது புகார்...!


உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெகன் கருப்பையாவை மருத்துவ பரிசோதனைக்காக செக்கானூரணி போலீசார் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் போலீசார் பேராசிரியரை மருத்துவ பரிசோதனை முடிந்த பின் அழைத்துச் சென்றனர்.