தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து  

சென்னை தண்டையார்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவியது.

தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து   

சென்னை தண்டையார்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பான சூழல் நிலவியது.

தண்டையார்பேட்டை அருகேயுள்ள எண்ணூர் நெடுஞ்சாலையில், தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தீயணைப்பு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.