தகராறில் ஈடுபட்ட வந்த 2 போதை ஆசாமிகள்... தடுக்க வந்த காவலரை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்!

தகராறில் ஈடுபட்ட வந்த 2 போதை ஆசாமிகள்... தடுக்க வந்த காவலரை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞர்!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கோவில் திருவிழாவில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் காவலரை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்னிலம் அருகேயுள்ள மேனாங்குடி சீத்தளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில், நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் இருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனை பார்த்த காவலர் அமைதியாக இருக்குமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் என்ற இளைஞர், கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் காவலர் முருகவேலை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.