தனியார் பேருந்து மோதி விபத்து... ! ஒருவர் பலி....!

சிதம்பரம் அருகே தனியார் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பலி.... தாலுகா போலீசார் விசாரணை...!

தனியார் பேருந்து மோதி விபத்து... ! ஒருவர் பலி....!

சிதம்பரம் அருகே தனியார் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்பலியாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சிதம்பரத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று காட்டுமன்னார்கோவில் நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. இந்ந நிலையில் அரியலூர் மாவட்டம் கடாரம்கொண்டான், கிராமத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் சிதம்பரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது புதுபூலாமேடு கிராமத்தில் உள்ள வளைவில் தனியார் பேருந்து அதிவேகமாக வந்து வளைந்த நிலையில், நவநீதகிருஷ்ணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நவநீதகிருஷ்ணன், பேருந்தின் அடிப்பகுதியில் இருசக்கர வாகனத்துடன் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்து வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் நவநீதகிருஷ்ணன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.