அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் கைது....

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே  அரிவாளால் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி சமூக வலைதளத்தில் பரப்பியவரை போலீசார் கைது செய்தனர். 

அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர் கைது....

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே  கச்சேரி தளவாய்புரம் தெற்குதெருவைச் சேர்ந்தவர் கலை செல்வன். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி அன்று  தன்னுடைய பிறந்த நாளை, தனது நண்பர்களுடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தின் சீட்டில் கேக் வைத்து அரிவாளால்  வெட்டி கொண்டாடினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதையடுத்து  ஓட்டப்பிடாரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிலான போலீசார், அரிவாளைக் கொண்டு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய கலைச்செல்வன் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 அரிவாள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.