சென்னை ஐ.டி பிரிவில் சிறந்து விளங்கும் மூவருக்கு 2.5 லட்சம் பரிசு அறிவிப்பு!  

ஐ.டி பிரிவில் சிறந்து விளங்கும் மூவருக்கு அதிமுக தலைமை முதல் பரிசாக 2.5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. 

சென்னை ஐ.டி பிரிவில் சிறந்து விளங்கும் மூவருக்கு  2.5 லட்சம் பரிசு அறிவிப்பு!   

ஐ.டி பிரிவில் சிறந்து விளங்கும் மூவருக்கு அதிமுக தலைமை முதல் பரிசாக  2.5 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. 

அதிமுக சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டுதல்படி, எதிர்பார்ப்புகளை விஞ்சும் அளவிற்கு பணியாற்றும் தலைசிறந்த மூன்று நபர்களை தேர்ந்தெடுப்படவுள்ளது. மேலும் அவர்களுக்கு நமது கழக ஒருங்கிணைப்பாளர்கள் கைகளினால் பரிசு பெறும் அரிய வாய்ப்பும் காத்திருக்கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறந்து விளங்கும் பணியாளர்களுக்கு முதல் பரிசாக 2.5 லட்சமும், இரண்டாவது பரிசாக 1.5 லட்சமும், மூன்றாவது பரிசாக 1 லட்சமும் வழங்கப்படும் என்றும் இந்த பரிசுத்தொகை கழக ஒங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.