அதிமுக மாநாடு ; விளம்பர ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம் ...!

அதிமுக மாநாடு ; விளம்பர ஸ்டிக்கர் ஒட்டும் பணி தொடக்கம் ...!

அதிமுக எழுச்சி மாநாட்டை யொட்டி சென்னை அடுத்த பல்லாவரத்தில் ஆட்டோவில் ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியினை முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். 

சென்னை பல்லாவரம் அடுத்த சிட்லபாக்கத்தில் வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான பல்வேறு பணிகளை அதிமுகவினர் செய்து வருகிறார்கள்.

அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் டாக்டர் டி.மோசஸ் ஜோஸ்வா ஏற்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் அதிமுகவின் எழுச்சி மாநாடு விளம்பர ஸ்டிக்கர்களை ஓட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

இதனை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஆட்டோக்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர் திரளாக கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க   | மகளிர் உரிமைத் தொகை; 2 கட்டமாக விண்ணப்பம் விநியோகம்!