அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...அண்ணாமலைக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் பேசுவார்களா?

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...அண்ணாமலைக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் பேசுவார்களா?

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த ஆயத்தமாகி வருகிறார். மேலும் அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

இதையும் படிக்க : "டாஸ்மாக் கடைகளை மூடினாலும் வருவாய் ஈட்ட முடியும்" அண்ணாமலை யோசனை!

இந்நிலையில் இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுக மாநில மாநாடு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. மேலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை பணிகளின் நிலை குறித்தும், நிர்வாக வசதிக்காக சில புதிய மாவட்டங்கள் உருவாக்குவது, சில மாவட்டங்களை இணைத்து ஒரே மாவட்டமாக்குவது, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாவட்ட செயலாளர்கள் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.