"தொண்டர்கள் ஒற்றைத்தலைமயை விரும்புகிறார்கள்" - அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி

தொண்டர்கள் ஒற்றைத்தலைமயை விருப்புவதாக அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

"தொண்டர்கள் ஒற்றைத்தலைமயை விரும்புகிறார்கள்" - அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி

தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் ஒற்றைத் தலைமையைத் தான் விரும்புகிறார்கள் எனவும் வரும் பொதுக்குழுக்கூட்டத்தில் அனைவருக்கும் நல்ல செய்தி உண்டு எனவும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்தியபின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமியே ஒற்றைத் தலைமையாக வேண்டும் என அனைவரும் விரும்புவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரும் ஜுலை 11ம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்டாயம் ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என குறிப்பிட்டார். கட்சிக்கு ஆதரவு அளிக்காமல் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என ஓபிஎஸ் நாடுவதால், மனஉளைச்சல் அவருக்கு அல்ல, தொண்டர்களுக்குத்தான் எனவும் ஜெயகுமார் கூறினார்.