தமிழக டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கனமழை வெள்ளத்தால், தமிழக டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டு, இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.

இதனை கண்டித்து, தமிழக டெல்டா மாவட்டங்களில் அதிமுகவினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி, திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோன்று,  மன்னார்குடியில் இழப்பீடு வழங்காத மாநில அரசை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் உள்பட ஏராளமான விவசாயிகளும் கலந்துகொண்டு, காய்ந்த நெற்பயிர்களுன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.