தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக...! விளக்கம் அளித்த அதிகாரி...!

தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பிய அதிமுக...! விளக்கம் அளித்த அதிகாரி...!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பிய நிலையில் விளக்கம் அளித்துள்ளார். 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக் கொள்ள மறுத்துள்ளனர். அதாவது, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பதவிகளில் யாரும் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் போட்டு ராயப்பேட்டை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : #BREAKING | அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு...! முதலமைச்சர் உத்தரவு..!