உறவினருக்காக இருக்கையில் அமர்ந்த பெண்ணை எழ செய்த ஏ.எஸ்.ஐ.. வைரலாகும் வாக்குவாதம் வீடியோ!!

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த அரசு பேருந்தில், உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் பெண்ணொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உறவினருக்காக இருக்கையில் அமர்ந்த பெண்ணை எழ செய்த ஏ.எஸ்.ஐ.. வைரலாகும் வாக்குவாதம் வீடியோ!!

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று சென்னைக்கு புறப்பட தயாராக இருந்தது. முன்பதிவு ஏதும் இல்லாததால் பயணிகள் அனைவரும் இடம் பிடித்து அமர்ந்தனர்.

அப்போது உதவி காவல் ஆய்வாளரான முருகேசன் என்பவர், தனது உறவினருக்கு இருக்கை வேண்டும் என்பதற்காக, அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவரை எழுந்திருக்குமாறு கூறினார். அதற்கு அப்பெண் முன்பதிவு இல்லாத பேருந்தில் ஏன் எழ வேண்டும் என கேட்டதால், இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் தனது பலத்தை காட்டும் விதமாக, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அங்கு வந்த காவலர்கள் அந்த பெண், அவரது கணவர் மற்றும் நடந்தவற்றை செல்போனில் படம் எடுத்த இளைஞர் ஆகிய மூன்று பேரையும் ஜீப்பில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

சொந்த விவகாரத்திர்காக பொது மக்களிடம் காட்டமாக பேசி, குற்றவாளி போல் அவர்களை ஜீப்பில் ஏற்றி சென்ற வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகிறது.