ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு... சிக்கும் 50 அதிகாரிகள்!

ஆவின் பணி நியமத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்த நிலையில், 50 அதிகாரிகள் சிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் பணி நியமனத்தில் முறைகேடு... சிக்கும் 50 அதிகாரிகள்!

ஆவின் பணி நியமத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்த நிலையில், 50 அதிகாரிகள் சிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆவினில் ஓராண்டில் மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப ஊழியர்கள் என 236 பணி நியமனங்களில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக பணி நியமன முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்றோர் சங்கம் வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க இருந்த போது, அப்போதைய அ.தி.மு.க., ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் விதிமீறியும், இடஒதுக்கீடு பின்பற்றாமலும் 230-க்கும் மேற்பட்ட பணியிடங்களை அவசர அவசரமாக நியமித்ததாக புகார் எழுந்துள்ளது. எனவே இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள், ஆவின் மேலாளர்கள் மீது ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறை விசாராணை நடத்த பால் வளத்துறை இயக்குநர் பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரை மூலம் 50 அதிகாரிகள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.