பசுமாட்டின் மீது மோதியதில் விபத்து... சம்பவ இடத்திலேயே பலியான வாலிபர்...

கும்பகோணத்தில் ஆயிகுளம் சாலையில் படுத்திருந்த பசுமாட்டின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பசுமாட்டின் மீது மோதியதில் விபத்து... சம்பவ இடத்திலேயே பலியான வாலிபர்...

கும்பகோணத்தில் ஆயிகுளம் சாலையில் இன்று அதிகாலை படுத்திருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் வாகனத்தை ஓட்டி வந்த காரைக்கால் ரோட்டை சோ்ந்த அருணாச்சலம் மகன் மணிகண்டன் (32)   என்பவர்  சாலையில் நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  நகரத்தில் முக்கிய  சாலைகளில் நாள்தோறும் 20 மணி நேரத்திற்கு மேலாக சுற்றி திரியும் மாடுகள் குறித்து, பொதுமக்கள் வணிகர்கள் நகராட்சி மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து உதவி ஆய்வாளரை மாடு முட்டி பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்றார். மாடுகளால் அடிக்கடி இத்தகைய விபத்துக்கள் அங்காங்கே ஏற்பட்ட போதும் யாரும் கண்டு கொள்ளாமல், மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.