மாலை முரசில் வந்த செய்தியால் நடந்த அதிரடி சோதனை.. மாணவர்களின் பெற்றோர்கள் மனமுருக தெரிவித்த நன்றிகள்!!
மாலைமுரசு செய்தி எதிரொலியால் திண்டிவனத்தில் தனியார் பள்ளி வாகனங்களை, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
பொதுவாக கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன், தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, தகுதி சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், திண்டிவனம் பகுதியில் உள்ளிட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இதனால் பெற்றோர் அச்சமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, மாலை முரசு தொலைக்காட்சிடியில் செய்தி வெளியானது.
இதனைத் தொர்ந்து, செய்தி எதிரொலியாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திண்டிவனத்தில் உள்ள கோவிந்தசாமி அரசு கல்லூரி வளாகத்தில் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம், மேல்மலையனூர், மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பெற்றோர் மாலை முரசு தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.