”பட்டாசு தொழிற்சாலைகள் விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை'' - அமைச்சர் எச்சரிக்கை

விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு தொழிற்சாலை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாட்சியாபுரம் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விதிமீறலில் ஈடுபடும் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகள், கவனமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர், ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.