முதல்வர் ஸ்டாலினை திடீரென நேரில் சென்று சந்தித்த நடிகை ரோஜா!! ஏன் தெரியுமா?

முதல்வர் ஸ்டாலினை திடீரென நேரில் சென்று சந்தித்த நடிகை ரோஜா!! ஏன் தெரியுமா?

ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி எம்எல்ஏ வும் நடிகையுமான ரோஜா, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நடிகர் விஜய்யின் வீட்டிற்கே சென்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சற்று முன் நடிகை ரோஜா சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரை நடிகை ரோஜா சந்தித்தது குறித்து பேசியுள்ளார். அதில் தான் இரு மாநிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து முதலமைச்சருடன் பேசினேன் என்று தெரிவித்தார். மேலும் தான் கூறிய பிரச்சனைகளை கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதற்கு முன்னதாக முதலமைச்சருக்கு ஆந்திர மாநிலத்தில் தனது தொகுதியான நகரி தொகுதி நெசவாளர்கள் தயாரித்த பட்டு சால்வையை நடிகை ரோஜா வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.