பத்திரப்பதிவு, வணிகவரித் துறை: நடப்பாண்டில் ரூ.28,116 கோடி கூடுதல் வருவாய் - அமைச்சர் மூர்த்தி தகவல்!

பத்திரப்பதிவு, வணிகவரித் துறை: நடப்பாண்டில் ரூ.28,116 கோடி கூடுதல் வருவாய் - அமைச்சர் மூர்த்தி தகவல்!

பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறையில் கடந்த ஆண்டைக் காட்டிலும்,  கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாக கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், வணிகவரி இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்தான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க : பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அன்பில் மகேஷ்...மாணவ மாணவிகளிடம் தேர்வு குறித்து கேட்டறிந்த அமைச்சர்!

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி, வணிகவரித்துறையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 28,116 கோடி ரூபாய் கூடுதல் வருவாயையும், பத்திர பதிவுத்துறையில் 3,588 கோடி ரூபாய் கூடுதல் வாருவாயையும் ஈட்டியுள்ளதாக தெரிவித்தவர், இந்தாண்டு மார்ச் மாதம் முடிவில் வருடத்தின் மொத்த வருவாய் 1,50,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், போலி பத்திர மோசடி தொடர்பாக16.000 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்ட நிலையில்,  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் மட்டும் 32 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.