ஆதினங்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் மடமாக மாறி வருகிறது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

மதுரையில் துறவிகள் மாநாடு என்ற பெயரில் ஆன்மீகவாதிகள் பேசிய பேச்சுக்கள் ஏற்க முடியாதவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆதினங்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் மடமாக மாறி வருகிறது - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முஸ்லீம்கள் தேச விரோதிகள், கம்யூனிஸ்டுகள் தேச அக்கறை இல்லாதவர்கள் என்று ஆதினம் பேசி உள்ளதாகவும், இதைப் பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார். 

அறநிலையத்துறை சொத்துக்களை எல்லாம் ஒப்படைக்குமாறு கேட்கும் ஆதின மடங்கள் என்ன அங்கீகரிக்கட்ட அமைப்புகளா என்று வினவிய அவர் கோவில்கள் வழிபாட்டு தலம் மட்டுமல்ல என்றும் அங்கு பல பொக்கிஷங்கள் இருப்பதால் அரசு தான் பாதுகாக்க வேண்டும் என்றார். 

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பாஜக தலைவர் அண்ணாமலை நிரூபித்தால் அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறுக்கே நிற்கப் போவதில்லை என்றும் அவர் கூறினார். இந்திய அரசை மதவெறி கொண்ட அரசாங்கம் என உலக நாடுகள் விமர்சிக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் வேதனை தெரிவித்த பாலகிருஷ்ணன், அரசின் செயல்பாடுகள் இப்படியே தொடர்ந்தால் இலங்கையின் நிலமைதான் இந்தியாவுக்கும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.