மதுவை சரிபாதியாக பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை- மதுப்பிரியர் வெறிச்செயல்

சேலத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுவை சரிபாதியாக பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை- மதுப்பிரியர் வெறிச்செயல்

சேலம் அன்னதானப்பட்டி சண்முகநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35). இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் ஜெயக்குமார் (40). மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து வேலுநகர் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது மதுவை பிரிப்பதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் மதுபாட்டிலை உடைத்து கோவிந்தராஜ் கழுத்தில் குத்தினார்.  தாக்கப்பட்ட கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த அன்னதானப்பட்டி போலீசார் கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கோவிந்தராஜை கொலை செய்த ஜெயக்குமாரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.