அடையாறு பணிமனை வணிக வளாகமாக மாற்றப்படும் - சென்னை மெட்ரோ...

அடையாறு பஸ் டிப்போவை 9 மாடிகள் கொண்ட வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடையாறு பணிமனை வணிக வளாகமாக மாற்றப்படும் - சென்னை மெட்ரோ...

சென்னை | மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 30-க்கும் மேற்பட்ட பேருந்து டிப்போக்கள் உள்ளன. இவற்றில் இருந்து தினசரி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் அடையாறு பஸ் டிப்போ மிகவும் பழமையான பஸ் டிப்போ ஆகும். இந்நிலையில், இந்த பஸ் டிப்போவை மேம்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அடையாறு பஸ் டிப்போ மொத்தம் 5.63 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த டிப்போவில் இருந்து தினசரி 159 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2 மாடிகள் கொண்ட இந்த டிப்போவில் நிர்வாக அலுவலகம், வாகன நிறுத்துமிடம், டயர் பிரிவு, பராமரிப்பு பிரிவு, உணவகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | மத அரசியலுக்கு எதிரானது திராவிட மாடல் - கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

இதற்கு அருகில் அடையாறு மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. சோழிநங்கல்லூர் முதல் சிப்காட் வரை உள்ள வழித்தடத்தில் அடையா மெட்ரோ ரயில் நிலையம் அமைய உள்ளது. இந்த மெட்ரோ ரயில் நிலையம் அடையாறு பஸ் டிப்போவில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அமைய உள்ளது.

எனவே, அடையாறு டிப்போவை பல்வேறு வசதிகளுடன் கூடிய வணிக வளாகமாக மாற்ற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி தரைத் தளம் மற்றும் முதல் தளம் பேருந்துகளை நிறுத்துவதற்கான இடமாக பயன்படுத்தப்படும்.

மேலும் படிக்க | “எல்லார்க்கும் எல்லாம்” - அறிக்கை வெளியிட்டு நூற்றாண்டு வளைவை திறந்து வைத்த முதலமைச்சர்!

2-வது தளம் பேருந்து டிப்போ மற்றும் வணிக கடைகள் இருக்கும் தளமாக இருக்கும். மூன்றில் இருந்து ஒன்பது வரை உள்ள தளங்கள் அனைத்தும் வணிக நிறுவனங்கள் உள்ள தளமாக அமைக்கப்படும். இவற்றில் தியேட்டர், உள் அரங்க விளையாட்டுகள், கூட்ட அரங்கம் ஆகியவைகள் இருக்கும்.

இந்த திட்டமானது ரூ.993 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு உள்ள வணிக வளாகங்கள் மூலம் ரூ.120 கோடியும், மற்றவை மூலம் ரூ.6 கோடியும் என மொத்தம் ரூ.126 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | வாழ்த்து மழையில் நனைந்த அமைச்சர் உதயநிதி...!