சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இரத்ததான முகாம்...! ஆர்வமுடன் கலந்துகொண்ட இளைஞர்கள்...!

கோவில்பட்டி அருகே சுதந்திர தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் நடைபெற்றது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இரத்ததான முகாம்...! ஆர்வமுடன் கலந்துகொண்ட இளைஞர்கள்...!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் திரளான இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை மற்றும் கோவில்பட்டி அரசு பொது மருத்துவமனை இணைந்து, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம், தவ்ஹீத் மர்கஸ்ஸில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சுலைமான் தலைமை தாங்கினார். கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு, முகாமை துவக்கி வைத்தார். இரத்த வங்கி குழு மருத்துவ அலுவலர் தேவசேனா தலைமையில் ஆய்வக தொழில்நுட்பவியலாளர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டு ஆண்கள், பெண்களிடம் இரத்தம் சேகரித்தனர். இதில் திரளான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.  கயத்தாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை  நிர்வாகிகள், உறுப்பினர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.