சிவதுர்க்கை அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்  

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரையை முன்னிட்டு அக்டோபர் 9-ஆம் தேதி சிவதுர்க்கை அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார்.

சிவதுர்க்கை அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்   

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரையை முன்னிட்டு அக்டோபர் 9-ஆம் தேதி சிவதுர்க்கை அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார்.

நவராத்திரி உற்சவம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூன்றாம் நாள் நிகழ்வு நேற்று பர்வதவர்த்தினி அம்பாள் சிவ துர்க்கை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பின் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப் பிடித்து தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய மூன்று தினங்களில் பொதுமக்களுக்கு கோவில்களில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நவராத்திரி உற்சவத்தில்  பொதுமக்களுக்கு த்டைவிதிக்கப்பட்டு கோயில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.