திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு...எச்சரிக்கை விடுத்த மேயர் ப்ரியா!

திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு...எச்சரிக்கை விடுத்த மேயர் ப்ரியா!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று பேசியதால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் ரிப்பன் மாளிகையில் ஏப்ரல் மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியன் ராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சேட்டு, குப்பைகள் சரிவர அப்புறப்படுத்துவதில்லை, சாலை வசதி பிரச்னை, விளையாட்டு திடல் வசதி இல்லை, இதனால் மக்களுடன் இணைந்து போராடுவோம் என தெரிவித்தார். மேலும், அதிமுக உறுப்பினர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மைக் ஆஃப் செய்யப்படுவது நியாயம் இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பேச முயன்றதால் மாமன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. 

இதையும் படிக்க : மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்...நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம்...!

உடனே, மேயர் குறிக்கிட்டு பேசினார், அப்போதும் அமளி தொடர்ந்ததால் கோபமடைந்த மேயர், அனைவருக்கும் அவையில் பேச சமமாக நேரம் ஒதுக்கப்படுவதாகவும், மேயர் பேசும்போது அவையில் யாரும் குறுக்கீடு செய்ய கூடாது என கோபத்துடன் எச்சரிக்கை செய்தார்.

பின்னர் மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, அதிமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து விளக்கி பேசினார்.