கைக் குழந்தை, மனைவியுடன் வந்தவர் மீது தாக்குதல்.. ரவுண்டு கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

கைக் குழந்தை, மனைவியுடன் வந்தவர் மீது தாக்குதல்.. ரவுண்டு கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!

பல்லடம் அருகே, கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய போதை இளைஞர்களுக்கு, ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

பேருந்து ஓட்டுநர், நடத்துனரை தாக்கிய போதை நபர்கள்:

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த தெற்குபாளையம் பிரிவில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தெற்குபாளையம் பிரிவை கடக்க முயன்ற போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கும்பல் ஒன்று பேருந்தை வழிமறித்து நிறுத்தியது. பின்னர் பேருந்தினுள் புகுந்த அந்த கும்பல், நடத்துனர் மற்றும் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கி உள்ளது.

கைக் குழந்தை, மனைவியுடன் வந்தவர் மீது தாக்குதல்:

பின்னர், பேருந்தில் இருந்து கீழே இறங்கிய அந்த போதை கும்பல், இருசக்கர வாகனத்தில் மனைவி குழந்தையோடு சென்ற கண்ணன் என்பவரை மடக்கி சரமாரியாக தாக்கியது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டு வந்து குடும்பத்தோடு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளுக்கு தர்ம அடி கொடுத்து, காவல்துறையில் ஒப்படைத்தனர்.

ரவுண்டு கட்டி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்:

காவல்துறை விசாரணையில், பேருந்தில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இறக்கி விட்டதற்கு பழிக்கு பழியாக நண்பர்களுடன் வந்து அந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.